மதுரை

மாட்டுக் கொட்டகையில் வழுக்கி விழுந்த பெண் பலி

 மதுரை அருகே மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்தபோது வழுக்கி விழுந்த பெண், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN


மதுரை அருகே மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்தபோது வழுக்கி விழுந்த பெண், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மனைவி சத்யா (40), கடந்த புதன்கிழமை மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி சத்யா வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் ராஜாங்கம் அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT