மதுரை

கணினி பயிற்றுநர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுச்சீட்டு பெறலாம்

DIN

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தபட உள்ளகணினி பயிற்றுநர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை 1(முதுகலை நிலை)-க்கான கணினி வழித்தேர்வு ஜூன் 23-ஆம் தேதி காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு உரிய அனுமதிச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியான ‌w‌w‌w.‌t‌r​b.‌t‌n.‌n‌i​c.‌i‌n
 பயனாளர் கடவு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதள முகவரிக்கு சென்று தேர்வுச் சீட்டை பதிவிறக்கம் செய்து எடுத்துக் கொண்டு நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வரவேண்டும். தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள்ளாக  தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என்று மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT