மதுரை

திருப்பரங்குன்றம் அருகே பகவத் கீதை சொற்பொழிவு

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி முனியாண்டி புரம் பகுதியில், பகவத் கீதை சொற்பொழிவு  செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறுகிறது. 
  மதுரை சின்மயா மிஷன் மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் முனியாண்டிபுரம் ஐயப்பன் கோயிலில் தமிழில் விளக்கவுரையுடன் கூடிய பகவத் கீதை சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந் நிகழ்ச்சியை ஐயப்ப சேவா சங்கத் தலைவர் பி.வி.ராகவ வாரியர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். சின்மயா மிஷன் ஆச்சார்யா சிவயோகானந்தா பகவத்கீதையை தமிழில் விளக்கம் அளித்து சொற்பொழிவாற்றுகிறார். இம்மாத 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தினமும் நடைபெறும் இந்த சொற்பொழிவில் அனைவரும் பங்கேற்கலாம் என மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT