மதுரை

வல்லடிகாரர் சுவாமி கோயில் தேரோட்டம்

DIN


மேலூர் அருகிலுள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் பங்குனிப் பொங்கல் விழாவை முன்னிட்டு, தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேலூர் அருகில் அம்பலகாரன்பட்டியில் அமைந்துள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழா, கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை மஞ்சு விரட்டு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை உச்சிப் பொங்கல் வைபவமும் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், பூரணாதேவி, பொற்கலைதேவி சமேத வல்லடிகாரர் சுவாமி தேரில் எழுந்தருளினார்.
விநாயகர் சின்னத் தேரில் எழுந்தருளினார். கோயிலை வலம் வந்த தேர், பிற்பகல் 1 மணியளவில் நிலையை அடைந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

SCROLL FOR NEXT