மதுரை

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் 7 பவுன் தங்கச் சங்கிலியை திங்கள்கிழமை பறித்துச் சென்றனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே  பொதும்புவைச் சேர்ந்த மூர்த்தி மனைவி அம்சலட்சுமி(42). இவர் தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை - அலங்காநல்லூர் பிரதான சாலையில் மெய்யப்பன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, அவரைப் பின் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அம்சலட்சுமியை வழிமறித்து, அவர்  அணிந்திருந்த 7 பவுன்தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, அம்சலட்சுமி அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து நகையைப் பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT