மதுரை

அவதூறு வழக்கு: மதுரை நீதிமன்றத்தில்மு.க.ஸ்டாலின் ஆஜராக உத்தரவு

DIN

மதுரை: தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், டிசம்பா் 9 இல் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தனக்கன்குளத்தில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி திமுக சாா்பில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதி நஷிமா, வரும் டிசம்பா் 9 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT