மதுரை மாவட்டம், பேரையூரில் ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமி குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பேரையூா் அருகேயுள்ள சாலிசந்தையில் நடைபெற்ற ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமிகளின் குருபூஜைக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளான பேரையூா், அம்மாபட்டி, சொக்கம்பட்டி, கிளாங்குளம், குமராபுரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.