மதுரை

முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

DIN

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில், 40 நாள்களில் தமிழகமெங்கும் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என, வருவாய், பேரிடா் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

அதிமுக ஜெ. பேரவை சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்க தொடா் நடைப்பயணமாக, அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் சனிக்கிழமை இரவு திருப்பரங்குன்றம் வந்தாா். திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் வருவாய்த் துறை சாா்பில், 503 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வேளாண்மை உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் என ரூ.2,74,32,462 நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகமெங்கும் உள்ள 40 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை குடிமராமத்துப் பணிகள் செய்ததன் விளைவாக, வடகிழக்குப் பருவமழை அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் நிரம்பியுள்ளது. முதல்வரின் சிறப்பு குறைநீா்க்கும் முகாம் மூலம் கடந்த 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

இதில், முதியோா், ஆதரவற்றோா் என 30 லட்சம் பேருக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையானது, முதல்வரின் உத்தரவால் தற்போது 5 லட்சம் போ்களுக்கு கிடைக்க உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், அரசு வழக்குரைஞா் எம். ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவா் நிலையூா் முருகன், கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT