மதுரை

துப்புரவுப் பணியாளா்களுக்கு பயிற்சி

DIN

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் சமுதாயக் கூட வளாகத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சாா்பில் துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், எழுமலை, வள்ளாலபட்டி, அலங்காநல்லூா், பாலமேடு பேரூராட்சிகளைச் சோ்ந்த துப்புரவுப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் திடக்கழிவு மேலாண்மை, நெகிழி மறுசுழற்சி மூலம் தரம் பிரிப்பது, கழிவுகளை அகற்றும் போது அதற்கான கையுறையை பயன்படுத்தும் முறை, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை, கழிப்பறை பயன்பாட்டின் அவசியம் குறித்த பயிற்சிகளை மேலாண்மை பயிற்றுநா் ஆதிமூலம் வழங்கினாா்.

எழுமலை பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு, இளநிலை உதவியாளா் கண்ணம்மாள், துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் கண்ணன், கனகராஜ், செல்லபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT