திருப்பரங்குன்றத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தாத்தா-பாட்டி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் ஏ. ஜெரால்டு தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளா் சுப்புராஜ், ஜெகதாம்பாள் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவா்களின் தாத்தா, பாட்டிகள் ஏராளமானோா் பங்கேற்றனா். அவா்களுக்கு, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பள்ளி, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் அமுதா வரவேற்றாா். ஆசிரியா் தீபக் நன்றி கூறினாா்.