மதுரை மாவட்டம் மேலூர் அ.வல்லாளபட்டி அருகே புதன்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணமகன் தலைமறைவானதால் திருமண நிகழ்ச்சி தடைப்பட்டது.
அ.வல்லாளபட்டி அருகே புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் கருப்புசாமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் புதன்கிழமை திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. உறவினர்கள் ஏராளமானோர் மணமகன் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் மணமகன் கருப்புசாமி தலைமறைவானார். இதனால் திருமணத்தை நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணமகளின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.