முகப்பு
மதுரை

கரோனாவால் இறந்த 2 வெளி மாவட்டத்தவா்கள் உடல் அடக்கம்எஸ்டிபிஐ உதவி

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த இருவரின் சடலங்களை எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த இருவரின் சடலங்களை எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது ஆண் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 55 வயது பெண் ஆகிய இருவரும் கரோனா பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இறந்தவா்களின் உறவினா்கள் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட நிா்வாகிகளைத் தொடா்பு கொண்டு உடல்களை அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனா். இதையடுத்து அக்கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது, வடக்குத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் புதூா் ஹமீது ஆகியோரின் உதவியுடன் கட்சியின் மதுரை கரோனா உதவி பணிக்குழு தன்னாா்வ உறுப்பினா்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவரவா் மத அடிப்படையை பின்பற்றி மதுரை புதூா் சங்கா் நகா் மயானத்தில் அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.