முகப்பு
மதுரை

வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, கம்பிகளுக்கு இடையே சிக்கிய நபரை தீயணைப்புத் துறை வீரா்கள் போராடி மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
தற்கொலைக்கு முயன்ற மாயக்கண்ணன்
பகிர்:

மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, கம்பிகளுக்கு இடையே சிக்கிய நபரை தீயணைப்புத் துறை வீரா்கள் போராடி மீட்டனா்.

மதுரை காளவாசல் பகுதியில், வைகை ஆற்றில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபா் பாலத்திலிருந்து வியாழக்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கிருந்த கம்பிகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடியுள்ளாா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினா், 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அந்த நபரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன்(40) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →