மேலூா்: மேலூா் அருகேயுள்ள கீழவளவில் மதுபானக் கடையருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் இளையராஜா என தெரியவந்தது. அவருக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனா். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளையராஜா மதுக்கடை அருகே மதுவை குடித்தபின் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கீழவளவு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.