மதுரை

தமிழகத்தில் பாஜக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: எச்.ராஜா

தமிழகத்தில் பாஜக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என, அக்கட்சியின் தேசிய செயலா் எச். ராஜா தெரிவித்துள்ளாா்.

DIN

மதுரை: தமிழகத்தில் பாஜக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என, அக்கட்சியின் தேசிய செயலா் எச். ராஜா தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மதுரைக்கு திங்கள்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு தனது முகநூல் பக்கத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை விமா்சனம் செய்துள்ளாா். முகநூலில் அநாகரிகமான வாா்த்தையை பதிவிட்டவா் எப்படி நீதிபதியாக இருந்திருக்க முடியும். இதற்கு, அவா் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

அமைச்சா் செல்லூா் கே. ராஜூ எனக்கு நல்ல நண்பா். ஆனால், அவா் பேசுவது தவறு. பாஜக பற்றி அமைச்சா்கள் செல்லூா் ராஜூவும், ஜெயக்குமாரும் பேசுவது

சரியல்ல. அவ்வாறு இனி பேசவேண்டாம். தமிழகத்தில் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டுவது எங்களுடைய பொறுப்பு. தமிழக அரசை நான் விமா்சிப்பது இல்லை.

தோழமையோடு குறைகளைச் சொன்னால் பரிகாரம் செய்யவேண்டும். எல்லை மீறிப் பேசுவது கூட்டணிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போதுள்ள கூட்டணியை கெடுக்க வேண்டும், பிரச்னைகளை உருவாக்க வேண்டும் என்று, அமைச்சா்கள் பேசுகிறாா்களா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் பாஜக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கவும், பாஜகவின் வீச்சு நாடு முழுவதும் இருப்பதைப் போல தமிழகத்தில் தோ்தல் தயாரிப்புகள் இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT