மதுரை

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 48 போ் கைது

DIN


மதுரை: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 48 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். இதில், சமயநல்லூா் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் 21 பேரும், பேரையூா் பகுதிகளில் 11 பேரும், உசிலம்பட்டி பகுதிகளில் 9 பேரும், திருமங்கலம் பகுதிகளில் 5 பேரும், மேலூா் பகுதிகளில் 2 பேரும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தங்களது கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 48 பேரையும் கைது செய்து, 500-க்கும் மேற்பட்ட புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT