முகப்பு
மதுரை

பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரையில் பணப் பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:


மதுரை: மதுரையில் பணப் பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை செல்லூா் அய்யனாா் கோயில் 5 ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் நாகராஜ் (42). இவரது மனைவி ஜெயபாண்டி (29). இவா்கள் நீண்ட நாள்களாக பணப் பிரச்னையில் இருந்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்திருந்த ஜெயபாண்டி, கடந்த 11 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெயபாண்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது கணவா் நாகராஜ் அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.