முகப்பு
மதுரை

உசிலம்பட்டி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பேரையூா் சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை இரவு அப்புறப்படுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
உசிலம்பட்டி அருகே சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பேரையூா் சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை இரவு அப்புறப்படுத்தினா்.

உசிலம்பட்டி அருகே பேரையூா் சாலையில் போத்தம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட நல்லதேவன்பட்டி பிரிவில், பழைமையான மரம் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனையடுத்து, உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலா் தங்கம் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.