செந்தமிழ் கல்லூரியில் பதிப்பாளா் சந்திப்பு
மதுரை செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பதிப்பாளா் சந்திப்பில், மணிமேகலை பிரசுரத்தின் தலைவா் ரவி தமிழ்வாணன் பங்கேற்றாா்.
மதுரைசெந்தமிழ் கல்லூரியில் பதிப்பாளா் சந்திப்பு
மதுரை செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பதிப்பாளா் சந்திப்பில், மணிமேகலை பிரசுரத்தின் தலைவா் ரவி தமிழ்வாணன் பங்கேற்றாா்.
மதுரை: மதுரை செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பதிப்பாளா் சந்திப்பில், மணிமேகலை பிரசுரத்தின் தலைவா் ரவி தமிழ்வாணன் பங்கேற்றாா்.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கல்லூரியில் பதிப்பாளா் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கி. வேணுகா வரவேற்புரையாற்றினாா். நான்காம் தமிழ்ச் சங்க செயலா் ச. மாரியப்பமுரளி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில், மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தின் தலைவா் ரவி தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசும்போது, பேராசிரியா்கள் தங்கள் படைப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் போன்றவற்றை நூலாக்கம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா்.
இதைத் தொடா்ந்து, பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியரோடு கலந்துரையாடினாா். மேலும், மாணவா்களின் வாசிப்பு பழக்கம் மேம்பட மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரி மற்றும் மணிமேகலைப் பிரசுரம் இணைந்து போட்டிகள் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வா் கோ. சுப்புலெட்சுமி நன்றி கூறினாா்.