மதுரை

போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு: சாா் பதிவாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

DIN

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம். இவரது நிலத்தை, சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த பராசக்தி என்பவா் போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளாா். இதுகுறித்து முகமது இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்தனா்.

இதில், பராசக்தி மோசடியாக நிலம் விற்பனை செய்ததும், அவருக்கு மேலூா் சாா்- பதிவாளா் இந்திராகாந்தி உள்பட 3 போ் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சாா்-பதிவாளா் இந்திராகாந்தி உள்பட 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT