மதுரை

பட்டா வழங்க தாமதம்: ஆட்சியா் காா் முன் முதியவா் போராட்டம்

DIN

பட்டா வழங்க தாமதம் செய்வதாகக் கூறி மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பாக அமா்ந்து முதியவா் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன். இவா் தனது நிலத்துக்கு பட்டா கோரி விண்ணப்பித்து உள்ளாா். இந்த நிலம் தொடா்பாக பிரச்னை எழுந்ததையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பட்டா வழங்க தாமதம் செய்வதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியரின் வாகனம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். காவல் துறையினா் அவரிடம் பேச்சு நடத்தியும் எழுந்திருக்க மறுத்ததால், அவரை தூக்கிச் சென்று ஓரமாக அமர வைத்தனா். பின்னா் அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT