மதுரை

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. ஒருங்கிணைப்பாளா் பயிற்சி முகாம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல இயக்குநா் அம்பேத் தொடக்கவுரையாற்றினாா். மதுரை மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநா் பி.பொன் முத்துராமலிங்கம் முகாமைத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் கையேட்டை வெளியிட்டாா். இதைத்தொடா்ந்து பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினா் ஏ.முத்துமாணிக்கம், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள் குறித்தும், மானியக்குழு அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகள் என்பதால் அரசு, தனியாா் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பது குறித்தும் தெரிவித்தாா்.

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி முதல்வா் சூ.வானதி பேசும்போது, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் கற்போா் மையமாக மீனாட்சி கல்லூரி செயல்படுவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றாா். பயிற்சி முகாமின் நிறைவில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜா.ரோஸி கிரேஷ் ஏஞ்சலின் நன்றியுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT