கீழவளவு அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கீழவளவு அருகே உள்ள பழையூா்பட்டியில் கண்மாயிலிருந்து கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டம் அழகுநாச்சிபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபாகரன் (28) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.