மதுரை

வெள்ளரிப்பட்டி ஊராட்சிப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடத்துக்கு பூமிபூஜை

DIN

மேலூா் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடத்துக்கு பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைக்கட்டடத்துக்கு ரூ.13 லட்சமும், நரசிங்கம்பட்டி ஊராட்சி பூசாரிபட்டியிலுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேவா் பிளாக் கற்கள் ரூ.6 லட்சம் செலவில் பதிப்பதற்கும் பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மேலூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமை வகித்தாா். மதுரை கிழக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

SCROLL FOR NEXT