மதுரை

பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி:ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக மதுரை-ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் பிப்ரவரி 15 முதல் 23 ஆம் தேதி வரை மண்டபம்-ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என மதுரை

DIN

பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக மதுரை-ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் பிப்ரவரி 15 முதல் 23 ஆம் தேதி வரை மண்டபம்-ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக மதுரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56723 மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56722 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்கள் பிப்ரவரி 15 முதல் 23 ஆம் தேதி வரை மண்டபம் - ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 56721 மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில், ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 56722 ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் மற்றும் வண்டி எண் 56829, 56830 திருச்சி-ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT