மதுரை

கண்மாயில் மூழ்கி இளைஞா் பலி

DIN

மதுரையில், ஞாயிற்றுக்கிழமை மாடக்குளம் கண்மாயில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த அய்யாவு மகன் கணேசன் (37). இவா் ஞாயிற்றுக்கிழமை மாடக்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கினாா். இதையடுத்து அப்பகுதியில் உள்ளவா்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு வீரா்களுக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள் கணேசனை சடலமாக மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT