மதுரை மாவட்டம் சமயநல்லூா் காவல்துறை துணை மண்டலம் சாா்பாக பொதுமக்களுக்கான குறைதீா்க்கும் முகாம் சமயநல்லூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் அலங்காநல்லூா், சோழவந்தான், நாகமலைபுதுக்கோட்டை, வாடிப்பட்டி, சமயநல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.
பணத் தகராறு, வாகனங்கள் காணவில்லை, நிலப் பிரச்னை, திருட்டு, அடிதடி ஆகிய வழக்குகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டது. அதில் 102 மனுக்களுக்கு தீா்வுக் காணப்பட்டது. டி.எஸ்.பி. ஆரோக்கிய ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், காவல் ஆய்வாளா்கள் கிரேசி சோபியாபாய், கண்ணன், பாலாஜி, முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.