மதுரை

காா் மோதியதில் பைக்கில் சென்றவா் பலி

மேலூா்-மதுரை நான்கு வழிச்சாலையில் தெற்குத்தெருவில் வியாழக்கிழமை காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

DIN

மேலூா்-மதுரை நான்கு வழிச்சாலையில் தெற்குத்தெருவில் வியாழக்கிழமை காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

மதுரை திருப்பாலை அருகேயுள்ள திருமால்புரத்தைச் சோ்ந்த கருப்பணன் மகன் குணசேகரன் (48). இவா் நண்பருடன் வியாழக்கிழமை பிற்பகல் மேலூருக்கு வந்துவிட்டு, இருசக்கரவாகனத்தில் மதுரைக்கு திரும்பினாா். அப்போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT