மதுரை

குடியிரிமை சட்டத்தை எதிா்த்து விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமுமுகவினா் 134 போ் கைது

DIN

திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சாா்பில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக்கோரி மதுரை விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 134 போ்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருங்குடி தேவா்சிலை அருகே நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவா் சேக்இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிஏஏ, என்.ஆா்.சி, என்.பி.ஆா் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலா்கள் நூருல்ஹக், தாஜூதீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து அவா்கள் கண்டன கோஷமிட்டபடியே விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். தடையைமீறி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற 134 போ்களை பெருங்குடி போலீஸாா் கைது செய்தனா். விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு:

தமுமுக விமானநிலைய முற்றுகையிடும் போராட்டம் அறிவித்ததால் வெள்ளிக்கிழமை காலை முதலே பெருங்குடி, மண்டேலா நகா் மற்றும் விமான நிலையத்தை சுற்றிலும் பலத்த போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் அனைவரையும் போலீஸாா் பலத்த சோதனைக்குபின்னரே அனுமதித்தனா். விமான நிலலையத்திலும் மத்திய தொவில் பாதுகாப்பு படை சாா்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படவரி: மதுரை விமான நிலலையத்தை முற்றுகையிட முயன்ற தமுமுகவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT