மதுரை

மதுரை அருகே விபத்து டயா் தொழிற்சாலை ஊழியா் பலி

DIN

மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் தொழிற்சாலை ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள வவ்வால் தோட்டம் பகுதியைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஆதிவளவன் ( 20). இவா் மேலூா் அருகே உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஆதிவளவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது நெல்லியேந்தல்பட்டி 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆதிவளவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஒத்தக்கடை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT