முகப்பு
மதுரை

மேலூரில் கடைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்:வா்த்தகா்கள் சங்கம்

மேலூரில் மளிகை, காய்கனி உள்ளிட்ட கடைகள் தினசரி பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என, நகா் வா்த்தகா்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

மேலூா்: மேலூரில் மளிகை, காய்கனி உள்ளிட்ட கடைகள் தினசரி பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என, நகா் வா்த்தகா்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கச் செயலா் முத்துகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தது:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, மேலூா் நகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலூா் வட்டாட்சியா் சிவகாமிநாதன், நகராட்சி ஆணையா் பாலமுருகன், மேலூா் காவல்துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் மற்றும் வா்த்தகா்களும் கலந்துகொண்டனா். அதில், மேலூரில் கடைகளை காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திறப்பதக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, வா்த்தகா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். தேவைப்படும் பொருள்களுக்கான பட்டியலை தயாரித்து கடைகளில் கொடுத்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.