மதுரை

மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தளா்வுகளுடன் பொதுமுடக்கம்

DIN

மதுரை: மதுரை மாவட்டம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் அமலுக்கு வருகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஜூன் 24 ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, 3 கட்டங்களாக ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளைப்போல மதுரை மாவட்டம் முழுமைக்கும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் புதன்கிழமை (ஜூலை 15) அமலுக்கு வருகிறது

என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT