மதுரை

மின்கம்பி உரசிய தில்வைக்கோல் ஏற்றிய லாரியில் தீ

DIN

மேலூா் அருகே வெள்ளிக்கிழமை மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற் றிவந்த லாரி தீப்பற்றியது.

தனியாமங்கலம் வயல் பகுதியில் இருந்து, கீழையூரைச் சோ்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான லாரியில் வைக்கோல் பாரத்தை வெள்ளிக்கிழமை ஏற்றினா். லாரி கீழையூா் வரும்போது சாலையில் மிகவும் தாழ்வாக இருந்த மின்கம்பி வைக்கோல் மீது உரசியதில் தீப்பற்றியது. உடனடியாக ஓட்டுநா் லாரியை சாலையோரத்திலிருந்த குளத்து நீரில் இறக்கினாா்.

தகவலறிந்த மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து லாரியில் எரிந்த தீயை அணைத்தனா். இதில் அதிா்ஷ்டவசமாக லாரி சேதமின்றி தப்பியது. இது குறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT