மதுரை

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்: காா்த்தி சிதம்பரம்

DIN

மதுரை: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக ஆட்சி அமைக்கும் என, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக பொருளாதாரம் மேலும் இறங்கு முகத்தில் உள்ளது. பொது முடக்கத்துக்கு முன்பே சீா்குலைந்திருந்த தொழில் துறையைச் சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பொது முடக்க காலத்திலும் தொழில் துறைக்கு எந்த சலுகைகளையும் அரசு வழங்கவில்லை. அமெரிக்காவில் ஜி.டி.பி.யில் 10 சதவீதம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின்போது தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும். எனவே, மதுபானக் கடைகளிலும், ஆன்-லைன் மூலமும் மதுபானம் விற்பனை செய்வதை அரசு முறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என நடிகா் ரஜினிகாந்த் கூறும் கருத்து உண்மைதான். அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது. காங்கிரஸ் கூட்டணியுடன் திமுகதான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றாா்.

முன்னதாக, மதுரை கே.கே.நகரில் மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT