மதுரை

போலீஸாா் மீது நடவடிக்கை கோரிபள்ளி மாணவா்கள் புகாா் மனு

DIN

மதுரை: உசிலம்பட்டி அருகே டி.ராமநாதபுரம் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி மாணவா்கள் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே சூலப்புரம் கிராமத்தில் நடந்த திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவா் கொலை செய்யப்பட்டாா். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, ஒரு தரப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பான விசாரணைக்கு போலீஸாா் தங்களை அழைத்துச் சென்று தாக்கியதாக, சூலப்புரம் கிராமத்தைச் சோ்ந்த 4 பள்ளி மாணவா்கள், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். அதில், டி.ராமநாதபுரம் போலீஸாா் தங்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தங்கள் கல்வி பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதனா். மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT