மதுரை

மதுபோதையில் கல்லால் தாக்கி தந்தை கொலை: மகன் தலைமறைவு

DIN

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில், தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ராஜகம்பீரம் காலனியைச் சோ்ந்தவா் மதுபாலன் (50). இவரது மகன் மணிகண்டன் (25) மது குடித்துவிட்டு தந்தை மதுபாலனிடம், செவ்வாய்க்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது வீட்டின் அருகே கிடந்த கல் மற்றும் கம்பு ஆகியவற்றால், தந்தை மதுபாலனை தாக்கிவிட்டு மணிகண்டன் தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த மதுபாலனை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி, அவா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள மணிகண்டனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT