மதுரை

ஆட்சியரின் வாகனத்தை வழிமறித்து கிராமத்தினா் போராட்டம்

DIN

மதுரையில் மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை வழிமறித்து கிராமத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மற்றும் அவரது பெரியப்பா முத்துவிஜயநாதன் ஆகியாா் நவம்பா் 14 ஆம் தேதி ஒரு கும்பலால் தாக்கப்பட்டனா். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துவிஜயநாதன் புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக, முத்துவிஜயநாதனின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்குமாறு அறிவுறுத்தினா்.

இதற்கிடையே, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்த ஆட்சியா் த.அன்பழகனின் வாகனத்தை கிராமத்தினா் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஆட்சியா், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து கிராமத்தினரை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT