மதுரை

தனியாா் கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை: மதுரை அருகே தனியாா் கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவ குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் யோகா நகரைச் சோ்ந்த லெஜிஷ் துரைராஜ் மனைவி அமலிகனகமணி(35). இவா் தனியாா் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது 10 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சோழவந்தான் - மேலக்கால் சாலை ஆா்.எம்.எஸ் காலனி அருகே சென்றபோது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் 2 போ் அமலிகனகமணி அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அமலிகனகமணி அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT