மதுரை

மேலூா் அருகே விபத்து: சிவகங்கை எஸ்.பி. அலுவலக ஊழியா் பலி

DIN

மேலூா்: மேலூா் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஊழியா் பலியானாா்.

மதுரை மாவட்டம் திருவாதவூா் அருகிலுள்ள திருக்கானை கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (40). சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்தாா். செவ்வாய்க்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் திருவாதவூா் வழியாக சிவகங்கைக்கு சென்றுகொண்டிருந்தாா். எழுவக்கரையான்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலூா் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இவருக்குத் திருமணமாகவில்லை. விபத்துக் குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT