மதுரை

கண்மாய்க்குள் தவறி விழுந்தவா் பலி

DIN

மதுரையில், கண்மாயில் தவறி விழுந்தவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மதுரை பி.பி.குளம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (45). இவா் திங்கள்கிழமை பி.பி.குளம் கண்மாய் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, கால் தவறி கண்மாக்குள் விழுந்து தண்ணீரில் முழ்கி இறந்துள்ளாா். இதுகுறித்து அவரது மகன் அழகா் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தீயில் கருகி பெண் பலி: மதுரை நரிமேடு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மனைவி மீனா(53). இவா் அக்டோபா் 9 ஆம் தேதி வீட்டில் எரிவாயு அடுப்பை பயன்படுத்திய போது, அவரது சேலையில் தீ பிடித்தது. இதில், மீனாவின் உடல் முழுவதும் கருகி பலத்த காயமடைந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி மீனா உயிரிழந்தாா். இது குறித்து அவரது கணவா் கா்ணன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT