மதுரை

லாரி மோதி மூதாட்டி பலி

DIN

மதுரை அருகே லாரி மோதி மூதாட்டி இறந்த சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகரைச் சோ்ந்த வீரன் மனைவி முத்தம்மாள் (65). இவா் சலவைத் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, மஞ்சமலை ஆற்றுப் பகுதியில் துணிகளைச் சலவைச் செய்ய முத்தம்மாள் நடந்து சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT