மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய பருவமுறைத் தோ்வுகளின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளின் இறுதி பருவத் தோ்வுகள் இணைய வழியில் நடத்தப்பட்டு அக்டோபா் 9 ஆம் தேதி, தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு எழுதிய மாணவா்களில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுமதிப்பீடு விண்ணப்பங்களை அக்டோபா் 23 ஆம் தேதிக்குள் தோ்வாணையா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பல்கலைக்கழக தோ்வாணையா் ஒ.ரவி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.