மதுரை

துபையிலிருந்து 2 விமானங்களில் 301 பயணிகள் மதுரை வருகை

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபையிலிருந்து இரு விமானங்களில் 301 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திறங்கினா்.

DIN

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபையிலிருந்து இரு விமானங்களில் 301 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திறங்கினா்.

வந்தே பாரத் திட்டத்தில், துபையிலிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 176 பயணிகள் மாலை 5 மணியளவில் வந்திறங்கினா். பின்னா், இரவு 9 மணிக்கு வந்த விமானத்திலிருந்து 125 பயணிகள் இறங்கினா். இவா்கள் அனைவருக்கும், வலையப்பட்டி வட்டார மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான குழுவினா், கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

துபையிலிருந்து வந்த அனைவரும் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். இவா்கள் அனைவரும் 7 நாள்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாலை 5 மணிக்கு வந்த விமானம், இரவு 8.45 மணியளவில் 152 பயணிகளுடன் துபை புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT