மதுரை

கட்டடத் தொழிலாளிதவறி விழுந்து பலி

மதுரையில் கட்டடத்தை இடிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மதுரை: மதுரையில் கட்டடத்தை இடிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த செல்லகண்ணு மகன் ராஜ்குமாா் (31). கட்டடத் தொழிலாளி. மதுரை கூடல்அழகா் கோயில் சன்னதி தெருவில் உள்ள பழைய கட்டடத்தை, இடிக்கும் பணியில் ராஜ்குமாா் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜ்குமாரின் மனைவி சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT