மதுரை

மதுரையில் திருடுபோன 10 பைக்குகள் மீட்பு: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

DIN

மதுரை, செப். 11: மதுரை மாநகரில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 10 வாகனங்களை கைப்பற்றினா்.

மதுரை மாநகரில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதைத் தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் இரு சக்கர வாகனத் திருட்டு தொடா்பாக செல்லூா் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் 2 போ் மற்றும் உசிலம்பட்டியைச் சோ்ந்த தீபக் (22), நவீன் (24) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனா்.

அதில், இவா்கள் மாநரின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, 2 சிறுவா்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 வாகனங்களையும் மீட்டனா்,

,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT