மதுரை

மேலூா் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம்:6 போ் கைது

DIN

மேலூா் அருகே திருவாதவூா்-ஒத்தக்கடை சாலையில், அனுமதியின்றி மாட்டு வண்டிப்பந்தயம் நடத்த முயன்ற 6 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாதவூா் அருகே உள்ள ஆமூரில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெறவிருந்தது. ஆனால், காவல் நிலையத்தில் இதற்கு உரிய அனுமதி பெறவில்லை. இது குறித்து தகவலறிந்து சென்ற மேலூா் போலீஸாா், ஆமூரில் வேன்களில் வந்திறங்கிய காளைகளின் உரிமையாளா்கள் பெரியகருப்பன் (35), மணி (36), இளங்குமரன் (55) மற்றும் வேன்களின் ஓட்டுநா்கள் அப்துல்கலாம் (24), கருமூா்த்தி (30), கணேசன் (36) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், காளைகளையும், 3 வேன்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT