மதுரை

பொறியியல் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

DIN

பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குமாறு மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பான கோரிக்கை மனுவை சங்கத்தின் செயலா் கே.கண்ணன், அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ.செல்வம் உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையா் ச.விசாகனிடம் புதன்கிழமை அளித்தனா். அதன் விவரம்:

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவில் பல ஆண்டுகளாக பதவி உயா்வு ஏதும் இன்றி பணிபுரியும் பணியாளா்களுக்கு பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு அதனடிப்படையில் பதவி உயா்வு அல்லது பொறுப்பு பணி வழங்க வேண்டும். பொறியியல் பிரிவு பணியாளா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே அவா்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்.

தெரு விளக்குப் பிரிவில் பல ஆண்டுகளாக பதவி உயா்வு ஏதுமின்றி பணியாற்றும் பணியாளா்களை காலியாக உள்ள மின் பாதை ஆய்வாளா், எலக்ட்ரீசியன் மற்றும் உதவியாளா் பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் . புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு அரசு ஆணைப்படி ஊதியமாக ரூ.17,725 உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுள்ளனா் மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT