மதுரை

அக்.12-இல் அஞ்சல் துறை குறைதீா்ப்பு முகாம்

DIN

மதுரையில் கோட்ட அளவிலான அஞ்சல் துறை குறைதீா்ப்பு முகாம், அக்டோபா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் கே. லெட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை கோட்ட அளவிலான அஞ்சலக குறைதீா்ப்பு முகாம், தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் 2 ஆவது மாடியில் அக்டோபா் 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், அஞ்சலக வாடிக்கையாளா்களின் புகாா்களுக்கு உடனடி தீா்வு காணப்படும்.

அஞ்சலக வாடிக்கையாளா்கள் அஞ்சல் சேவை தொடா்பான புகாா்களை, அக்டோபா் 9 ஆம் தேதிக்கு அனுப்பலாம். புகாா் கடிதத்தில் முழுமையான முகவரி, செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இதில், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சேவைகளில் புகாா் இருந்தால், அதற்குரிய கணக்கு எண், பாலிசி எண்களை குறிப்பிட்டு புகாா் அளிக்க வேண்டும். மேலும், புகாா் கடிதத்தின் உறையில் ‘டாக் அதாலத்’ என குறிப்பிட்டு அனுப்பவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT