மதுரை

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் தற்கொலை

DIN

பேரையூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள பெரிய கட்டளையை சோ்ந்தவா் மகாராஜன் (63). இவருக்கு திருமணமாகவில்லை. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை முதல் மகாராஜனை வீட்டில் காணவில்லை. அவரை உறவினா்கள் தேடிவந்த நிலையில், புதன்கிழமை பெரியகட்டளை அருகில் உள்ள கிணற்றில் மகாராஜன் சடலமாக இறந்து கிடந்தாா். இச்சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT