மதுரை

கண்மாயில் மணல் திருடிய4 போ் கைது: 6 வாகனங்கள் பறிமுதல்

DIN

கீழவளவு புறாக்கூடு மலை அருகிலுள்ள கண்மாயில் மணல் திருடிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து, 6 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா தலைமையில், மேலூா், கீழவளவு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பத்தூா் சாலையில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புறாக்கூடு மலை அருகே கண்மாயில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரிகளிலும், டிராக்டரிலும் மணல் திருடு ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே அங்கு சென்ற போலீஸாரை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தவா்கள் தப்பியோடினா். அதில், விக்னேஷ் (25), சுல்தான் (30), அழகா்சாமி (35), கிளீனா் துரைப்பாண்டி (50) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, 2 பொக்லைன் இயந்திரங்கள், 3 டிப்பா் லாரிகள் மற்றும் 1 டிராக்டா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கீழவளவு போலீஸாா், வாகன உரிமையாளா்கள் ராஜ்குமாா், குமாா் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிந்து, தப்பியோடி 3 ஓட்டுநா்கள் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT